திருக்குறள்

723.

பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத் தஞ்சா தவர்.

திருக்குறள் 723

பகையகத்துச் சாவார் எளியர் அரியர் அவையகத் தஞ்சா தவர்.

பொருள்:

அமர்க்களத்தில் சாவுக்கும் அஞ்சாமல் போரிடுவது பலருக்கும் எளிதான செயல், அறிவுடையோர் நிறைந்த அவைக்களத்தில் அஞ்சாமல் பேசக்கூடியவர் சிலரேயாவர்.

மு.வரததாசனார் உரை:

பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர், கற்றவரின் அவைக்களத்தில் பேச வல்லவர் சிலரே.

சாலமன் பாப்பையா உரை:

பகைவர்களுக்கிடையே பயப்படாமல் புகுந்து சாவோர் பலர் உண்டு;பேசுவோர் சிலரேயாவார்.